Description
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)
மாயில் கைராபாதி
அண்ணலார் (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த கலீஃபாக்களில் பனூஉமய்யா குலத்தின் கலீஃபாவுடைய நேர்மையான – அழகிய வரலாற்று நூல்.
நேர்வழி நடந்த கலீஃபாக்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய அரசியலமைப்பின் அடிப்படைகளை கடைபிடித்தவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்குப் பிறகு இவைகளை எப்பொழுதும் கவனத்தில் வைத்து ஆட்சி நடத்தியவர் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் என்பது வரலாறு கூறும் உண்மையாகும்.
சீர்கெட்டிருந்த சமுதாயத்தை சீர்திருத்த உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் நற்சிந்தனை உருவாக்குதல், நல்ல கல்வியைப் பரப்புதல், நல்லோர்களுடன் பழகுதல், நல்லாட்சியை ஏற்படுத்துதல் (கிலாஃபத்தை மீண்டும் புதுப்பித்தல்) என்ற நான்கு முத்தான காரியங்களையும் முன்நிறுத்தி அவற்றின் மீது ஒரே சமயத்தில் கவனம் செலுத்தினார்கள்.
இறையச்சம்,இறைவனுக்கு மாறு செய்யாமை, இறை நேசம் போன்ற இஸ்லாமிய வழிமுறைகள் இஸ்லாமிய ஆட்சியின் உயிரோட்டமாக இருந்தன. ஆளும் வர்க்கத்தினரிடமும் சமுதாயத்தின் அனைத்து மக்களிடமும் அந்த உயிரோட்டம் காணப்பட்டது. அதனால் ஆட்சியும் சிறப்பாக நடைபெற்றது













Reviews
There are no reviews yet.