Description
ஃபாலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு
‘உலகம் யூதர்களுக்கு பல அநீதிகளை இழைத்தது. ஐரோப்பாவில் அவர்கள் வாழுமிடங்களைத்தான் சேரிகள் ‘Ghettos’ என அழைத்தார்கள். அவர்களை அவ்வாறு கஷ்டங்களுக்கு ஆட்படுத்திடவில்லை என்றால் அவர்கள் பாலஸ்தீனை நோக்கிவரும் நிலை ஏற்பட்டிருக்காது. மொத்த உலகமும் அவர்களின் வசிக்குமிடமாக ஆகி இருக்கும்.”
“ஆனால் இப்போது என் கருத்துப்படி அவர்கள் பாலஸ்தீனில் தங்களைத் திணிக்க எண்ணற்ற தவறுகளைச் செய்கின்றார்கள். அவர்கள் பாலஸ்தீனில் தங்களைக் கட்டாயமாக அமர்ந்திட பிரிட்டன், அமெரிக்கா ஆகியவற்றின் உதவியை நாடுகின்றார்கள். இப்போது தீவிரவாதத்தை முழுமையாக நாடுகின்றார்கள். அவர்கள் உலகக் குடிமக்களாக இருந்திருந்தால் இன்றும் இனிவரும் நாள்களிலும் கண்ணியமிக்கவர்களாக இருந்திருப்பார்கள். அவர்களின் உழைப்பும் சுறுசுறுப்பும் அவர்களை உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ள செய்திருக்கும்.”
“யூதர்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் (கிறிஸ்தவ உலகத்தால்) என்ற உண்மை அவர்களுக்கு (யூதர்களுக்கு) அமைதியான வழிமுறை களின் ஆற்றலை அவர்களுக்கு உணர்த்தி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பிரிட்டன் நாட்டின் ஆயுதங்களையும் அமெரிக்க நாட்டின் பணத்தையும் தங்களது தீவிரவாதத்தையும் நம்பி, தங்களுக்கு எந்தத் தீமையையும் செய்யாத மக்களின் பூமியில் ஏன் தங்களை நட்டுக்கொள்ள நாடுகின்றார்கள்? அவர்கள் பாலஸ்தீனில் தங்களைத் திணித்திட ஏன் தீவிரவாதத்தை நாடுகின்றார்கள்?”
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஹரிஜன் பத்திரிகை. ஜூலை-21, 1946













Reviews
There are no reviews yet.