Description
இலங்கை முஸ்லிம் வரலாறு | History of Sri Lankan Muslim
வரலாறு ஒரு கலை என்று வாதித்தவர்களும் வரலாற்றில் இருந்தனர். இன்னும் இருக்கின்றனர். இலக்கியம் படைப்பது போன்று புராணங்களையும் கற்பனைக் காவியங்களையும் படைத்து அதற்கு வரலாற்று முலாமைப்பூசும் முயற்சிகளை அவர்கள் ஆதரித்து வந்தனர். துரதிஷ்டம் அந்த கற்பனைகள் இன்று அரசியலுக்காக நிஜ வரலாறாக நம்பவைக்கப்பட்டு பள்ளிக் கூடப் பாடத்திட்டமாகக் கற்பிக்கிறார்கள்.
வரலாற்றில் கலையம்சங்கள் ஓரளவுக்கு உள்ளது என்பது உண்மையாயினும் இன்றைய பிரமிப்பூட்டும் மனித ஆய்வுகளின் பெறுபேறாக வரலாற்றை அறிவியல் ரீதியில் அணுகவும் கையாளவும் புதிய பாதைகள் திறக்கப் பட்டுள்ளன. இலக்கிய மூலாதாரங்களுக்கு அப்பால் செப்பேடுகள், நாணயங்கள், கல்லறைகள், ஓலைகள், கல்வெட்டுக்கள் பயன்பாட்டிலிருந்த உலோகப் பொருட்கள் போன்ற தொல்லியல் ரீதியான ஆய்வுகளில் அதிகபட்ச அறிவியல் முறைகளைக் கையாண்டு வரலாற்று உண்மைகளைக் கண்டடையும் புதிய செல்நெறிகள் தோற்றம் பெற்றுள்ளன. ஆக முறையான வரலாற்று வரைவியல் அறிவும் விஞ்ஞான நுணுக்கங்களும் இத்துறை சார்ந்தோருக்கு மிக அவசியம்.
இந்தப் பின்னணியில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று வரைவியலை இந்நூல் ஆராய்கிறது. முஸ்லிம் வரலாறு எப்போது துவங்குகிறது? இதுகாறும் எழுதப்பட்ட வரலாற்று நூல்களின் உள்ளடக்கம் எத்தகையது ? வரலாற்று எழுதுகையில் நிலவும் இடைவெளிகள், போதாமைகள், பிரச்சினைகள் எவை ? என்பவற்றை ஆராயும் இந்நூல் சோனகர்கள், துலுக்கர்கள், மரைக்காயர்கள், மூர் போன்ற குழுக்களின் வரலாற்றையும் பேசுகின்றது. இலங்கை முஸ்லிம் வரலாற்றுக்குப் பங்களித்தோர் மற்றும் அவர்களால் எழுதப்பட்ட நூல்களையும் இந்நூல் ஆராய்கிறது.
சமூக விஞ்ஞானங்களுக்கான இப்னு கல்தூன் ஆய்வகம்













Reviews
There are no reviews yet.