Description
ஸூரா தலாக் விளக்கவுரை
விவாகரத்து தொடர்மான வழிகாட்டங்களும் சில சட்ட விளக்கங்களும்
இன்றைய சமூக ஒழுங்கில் குடும்ப அலகு எதிர்நோக்கும் சிக்கல்கள், சவால்கள் யாவை? அல்குர்ஆனின் குடும்பம்சார் வழிகாட்டல்கள் மூலம் அச்சிக்கல்களை எவ்வாறு நிறுவன ஒழுங்கு வழியாக தீர்வுகளை நோக்கி நகர்த்தலாம்? என்ற கேள்விகளை ஆய்வுக்குட்படுத்துவது அவசியமாகிறது. இது ஒரு தனித்த வேலைத்திட்டம், வித்தியாசப்பட்ட துறைகளையும் சார்ந்த நிபுணர்கள், ஆய்வாளர்களது ஒத்துழைப்பும் பங்கேற்பும் இப்பாரிய வேலைத்திட்டத்துக்கு அவசியப்படுகிறது. மருத்துவர்கள், உளவியல்துறை ஆலோசகர்கள், அல்குர்ஆன்-சுன்னா துறை சார்ந்த அறிஞர்கள் என பலரும் சமூகத்தின் குடும்ப அலகைப் பாதுகாப்பதில் பொறுப்பாளர்களாகி-நார்கள். இப்புத்தகத்தில் நாம் மிகச் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கும் “குடும்ப நல்லிணக்க சபை எனும் நிறுவன ஒழுங்கை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவ்வாறான நிறுவனமயப்பட்ட கூட்டு முயற்சிகள் உருவாக்கப்படாவிட்டால் பெருந்தொகையான முஸ்லிம் குடும்பங்களாது நிலைமை கேள்விக்குள்ளானதாகிவிடும் எனும் எச்சரிக்கை சமிக்ஞையும் எம்முன்னால் தென்படுபடுகிறது. தொழிநுட்ப வளர்ச்சி, உலகமயமாக்கல். மேற்குகை வாழ்வவாழுங்கின் செல்வாக்கு, சடவாத சிந்தனைப் போக்கு போன்ற அலையலையாய் வரும் சவால்களுக்கு முன் நாக்கும் பிடிக்க அவற்றைவிட சக்திமிக்க நிறுவன ஒழுங்குகள் எம்சமூகத்தில் தோற்றம் பெற்று. இயங்க ஆரம்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறு வேண்டியுள்ளது.





Reviews
There are no reviews yet.